Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று குணமாகிவிட்டது ... சரண் வெளியிட்ட தகவல் !

எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று  குணமாகிவிட்டது ... சரண் வெளியிட்ட தகவல் !
, திங்கள், 7 செப்டம்பர் 2020 (17:31 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக இருந்தாலும் தற்போது அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீராகி வருகிறது.

மேலும் அவர் சமீபத்தில் கண்விழித்து தனது மகன், மகள், உள்ளிட்டோர்களை அடையாளம் கண்டு கொண்டதாகவும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்தது

 
மேலும் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமும் எஸ்பிபி சரண் அவர்களும் தினசரி அப்டேட்களை கொடுத்து வந்தனர். இதிலிருந்து எஸ்பிபி அவர்கள் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றத்தை அடைந்து வந்தார் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் வரும் திங்கட் கிழமை அன்று நல்ல செய்தி வெளியாகும் என சரண் தெரிவித்திருந்த நிலையில், இன்று எஸ்.பிபி தனது கைப்பட மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள்,மற்றும் செவிலியர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.. ’’அதில் ஐ ல்வ் யூ ஆல் ‘’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் எஸ்பிபியின் மகன் சரண் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளார், எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு உடல் நிலை குணமாகியுள்ளதாகவும், அவருக்கு கோவிட் 19 என்ற கொரொனா வைரஸ் தொற்று இல்லை எனவும் ஹீலிங் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஐபேட்டில் கிரிக்கெட் டென்னிஸ் பார்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிசியோதெரவி சிகிச்சை பெற்றுவருகிறார் அவருக்காக பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
 

sp saran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் அடுத்த படப் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது !