Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிஷ்கின் பேசும்போது சிரித்துக்கொண்டுதானே இருந்தீர்கள்… சமுத்திரக்கனி ஆவேசம்!

Advertiesment
மிஷ்கின் பேசும்போது சிரித்துக்கொண்டுதானே இருந்தீர்கள்… சமுத்திரக்கனி ஆவேசம்!

vinoth

, வெள்ளி, 31 ஜனவரி 2025 (09:14 IST)
தமிழ் சினிமாவில் பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார். அதே போல இளையராஜா பற்றி பேசும்போது அவரை ஒருமையில் பேசியிருந்தார். அது ஒரு அன்பின் வெளிப்பாடாக இருந்தாலும் மேடை நாகரிகம் கருதி அப்படி பேசியிருக்க வேண்டாம் என்ற கருத்துகளும் எழுந்தன.

அதன் பின்னர் தன்னுடைய பேச்சுக்காக ‘பேட் கேர்ள்’ படத்தின் நிகழ்ச்சியில் மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில் சமீபத்தில் மிஷ்கினின் இந்த பேச்சு குறித்து நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “மிஷ்கின் பேசியதற்காகதான் அவர் மன்னிப்புக் கேட்டார். அவர் என்னைப் பார்க்கும்போது கூட கெட்டவார்த்தை சொல்லி அழைத்துவிட்டு, அதன்பின்னர்தான் நலம் விசாரிப்பார். அவர் பேசியபோதே இதை ஏன் பத்திரிக்கையாளர்கள் கேட்கவில்லை. சிரித்துக் கொண்டுதானே இருந்தீர்கள். அவருக்கான நானும் உங்கள் கால்களை தொட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் ரி ரிலீஸ் ஆகும் சிம்புவின் மாநாடு… இத்தனை தியேட்டர்களிலா?