Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல்நிலை பற்றி பேசும்போது கண்கலங்கிய சமந்தா…!

உடல்நிலை பற்றி பேசும்போது கண்கலங்கிய சமந்தா…!
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (19:59 IST)
சமந்தா தற்போது யசோதா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

வழக்கமாக சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக எந்தவொரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் அவர் தோல் சம்மந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. அதனால் தான் அவர் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை என்று வதந்திகள் கிளம்பின.

இது பற்றி சில தினங்களுக்கு முன்னர் பதிவிட்ட அவர் மையோசிட்டிஸ் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையில் இருப்பதாகவும், அதில் இருந்து இப்போது குணமாகி வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் அவர் சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என நம்பிக்கை வார்த்தைகளை பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது யசோதா படத்தின் ரிலீஸை ஒட்டி அதன் ப்ரமோஷனில் கலந்துகொண்டுள்ள சமந்தா தனது உடல்நிலையைப் பற்றி பேசும் போது கண்கலங்கி பேசினார். அதில் “என்னுடைய உடல்நிலையைப் பற்றி என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு தெரியவேண்டும் என நினைத்தேன். வாழ்க்கையில் நல்ல நாட்களும் இருக்கும். கெட்ட நாட்களும் இருக்கும். ஆனாலும் நான் உயிரோடு இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் போராடிதான் வாழ்ந்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூனு பேரும் பிஸி…. கிடப்பில் போடப்பட்ட ஹெச் வினோத் விஜய் சேதுபதி படம்!