Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மகளை புகைப்படம் எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்: நடிகை ஆலியா பட் எச்சரிக்கை..!

Mahendran
வெள்ளி, 14 மார்ச் 2025 (16:11 IST)
என் மகளை புகைப்படம் எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
"எங்கள் குழந்தையை பாதுகாக்க எங்களை பொறுத்தவரை எதையும் செய்யத் தயங்க மாட்டோம். இது ஒரு தனிப்பட்ட விஷயமாக தோன்றலாம். ஆனால், பெற்றோர்களாக நாங்கள், எங்கள் மகளின் தனியுரிமையை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். 
 
இன்று அனைவரிடமும் செல்போன்கள் இருக்கின்றன. எதையும் எப்போது வேண்டுமானாலும் பதிவுசெய்யலாம். அது இணையத்தில் விரைவாக பரவக்கூடும். அதனால், அது எங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்படாது.
 
பபார்ஸிகள் எங்களது குடும்பத்தின் ஒரு பகுதியாகவே உள்ளீர்கள். அதனால், இந்த வேண்டுகோளை உங்களிடம் மட்டும்தான் வைக்க முடியும். உங்கள் ஒத்துழைப்பால் மட்டும்தான் இது சாத்தியமாகும். மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம்.
 
நான் மும்பையில் பிறந்தவன். நீங்கள் அனைவரும் எனது குடும்பம்தான். ஊடகங்கள் எங்களது கோரிக்கையை மதிக்கின்றன. ஆனால், சிலர் தொடர்ந்து இதை மீறுவதை தவிர்க்க முடியவில்லை. இதனால், சட்ட நடவடிக்கையை தவிர்த்து வேறு வழியில்லை என்று நினைக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments