Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்‌ஷய் குமார் நடிப்பில் முதல் பாலிவுட் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு… தொடங்குவது எப்போது?

Advertiesment
அக்‌ஷய் குமார் நடிப்பில் முதல் பாலிவுட் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு… தொடங்குவது எப்போது?

vinoth

, வெள்ளி, 14 மார்ச் 2025 (12:09 IST)
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனராக இருப்பவர் வெங்கட்பிரபு. சென்னை 28 திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய அவர் அஜித், சூர்யா, சிம்பு, கார்த்தி மற்றும் விஜய் ஆகிய முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி ஹிட்ஸ்களைக் கொடுத்துள்ளார்.

சென்னை 28, சரோஜா போன்ற மீடியம் பட்ஜெட் படங்களை இயக்கிக் கொண்டிருந்த அவரை முன்னணி இயக்குனர் ஆக்கியது அஜித் நடிப்பில் அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம்தான். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்துதான் பல முன்னணி நடிகர்களின் பார்வை அவர் மேல் விழுந்தது.

சமீபத்தில் அவர் விஜய்யை வைத்து இயக்கிய ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ 2024 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்தது. இதையடுத்து அவரின் அடுத்த படம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அக்‌ஷய் குமாருக்கு கதை பிடித்துள்ளதாகவும், ஆனால் 10 மாதம் கழித்துதான் அவரால் இந்த படத்துக்கான தேதிகள் ஒதுக்க முடியும் என்றும் சொல்லிவிட்டாராம். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்தார்த் நிஜ கிரிக்கெட் வீரர் போலவே இருக்கிறார்… டெஸ்ட் பட டிரைலரைப் பாராட்டிய அஸ்வின்!