Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிச்சை எடுத்தாலும் எடுப்பேன்.. வடிவேலு கூட நடிக்க மாட்டேன் – நடிகை சோனா ஆவேசம்!

Advertiesment
பிச்சை எடுத்தாலும் எடுப்பேன்.. வடிவேலு கூட நடிக்க மாட்டேன் – நடிகை சோனா ஆவேசம்!

vinoth

, வெள்ளி, 14 மார்ச் 2025 (14:21 IST)
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனா.  90 களில் நிறைய படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன் பின்னர் சில படங்களில் கவர்ச்சி நடிகை வேடத்தில் நடித்தார். இடையில் பிரபல பாடகர் எஸ் பி பி சரண் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த சர்ச்சைகளால் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்தே காணாமல் போன அவர், ‘ஷார்ட்பிளிக்ஸ்’ ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஸ்மோக்’ என்கிற வெப்சீரிஸ் மூலமாக இயக்குனராக கம்பேக் கொடுக்கவுள்ளார். இந்த தொடர் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் வடிவேலு குறித்து ஆவேசமாகப் பேசியுள்ளார். அதில் “குசேலன் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்தேன். அதன் பின்னர் அவருடன் நடிக்க வந்த 16 பட வாய்ப்புகளை வேண்டாம் என்றேன். பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிர, அவரோடு நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டேன். அவர் ஒரு மோசமான கேரக்டர்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன் அப்பாவின் வாழ்க்கையை வெப் சீரிஸாக எடுக்கும் சூரி… இயக்குனர் இவர்தான்!