Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் இப்போது என் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்… ரகுல் ப்ரீத் சிங் தன்னம்பிக்கை!

நான் இப்போது என் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்… ரகுல் ப்ரீத் சிங் தன்னம்பிக்கை!
, சனி, 15 மே 2021 (16:55 IST)
முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தான் யாருக்கும் பயந்து வாழும் ஆளில்லை எனக் கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

சமீபத்தில் போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் அவர் சிக்கியதாக எழுந்த செய்திகள் சலசலப்பை உருவாக்கின. இந்நிலையில் அவர் ‘நான் யாருக்கும் பயந்து வாழும் ஆள் இல்லை. நான் வெறும் கையோடு இங்கு வந்தேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையே நான் பார்க்கிறேன். அதைப் பயன்படுத்திக் கொண்டு இப்போது என் கனவுகளில் நான் வாழ்ந்து வருகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடிக்கு செல்லும் ஜெய் படம்! யார் கொடுத்த ஐடியா தெரியுமா?