Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“என்னை ஏன் ஏலத்தில் யாருமே எடுக்கவில்லை என தெரியவில்லை” – சந்தீப் ஷர்மா புலம்பல்!

“என்னை ஏன் ஏலத்தில் யாருமே எடுக்கவில்லை என தெரியவில்லை” – சந்தீப் ஷர்மா புலம்பல்!
, புதன், 28 டிசம்பர் 2022 (15:29 IST)
ஆர் சி பி அணியின் கேப்டனாக இருக்கும் கோலி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஆனால் அவரையே தன்னுடைய பந்துவீச்சில் அதிகமுறை அவுட் ஆக்கிய பெருமைக்குரியவர் சந்தீப் ஷர்மா. இதுவரை சில அணிகளுக்காக ஐபிஎல் விளையாடியுள்ள சந்தீப் ஷர்மா பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக வீசும் தன்மை கொண்டவர்.

ஆனால் சமீபத்தில் நடந்த ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை. இதுபற்றி பேசியுள்ள அவர் “என்னை ஏன் யாருமே ஏலத்தில் கேட்கவில்லை என்பது எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. இதுவரை நான் விளையாடிய அணிகளில் சிறப்பாகவே விளையாடி இருக்கிறேன். இப்போது உள்ளூர் கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே விளையாடி வருகிறேன்.நன்றாக பந்துவீசுவது மட்டுமே என் கையில் உள்ளது. அணி நிர்வாகங்களை என்னால் கட்டுபடுத்த முடியாது” எனப் புலம்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிவுக்கு வருகிறதா ஷிகார் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை?