Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி போட்ட உத்தரவு: கார்த்திக் சுப்பராஜ் ரியாக்சன்...

ரஜினி போட்ட உத்தரவு: கார்த்திக் சுப்பராஜ் ரியாக்சன்...
, திங்கள், 26 மார்ச் 2018 (21:25 IST)
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்த பின்னரும் தனது அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். 
 
தற்போது நடித்து முடித்துள்ள காலா படம் சென்சார் சிக்கல் காரணமாக ரிலீஸ் தேதி அன்று வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2.O படம் டிஜிடெல் வேலை காரணமாக தாமதமாகியுள்ளது. 
 
தற்போது சினிமா துறையில் நடந்து வரும் ஸ்ட்ரைக் காரணமாக எந்த பணிகளும் தொடங்கப்படாமலே உள்ளன. இந்நிலையில் ரஜினியிடமிருந்து கார்த்திக் சுப்பராஜ்க்கு உத்தரவு ஒன்று வந்துள்ளதாம்.
 
ஸ்ட்ரைக் முடிந்தவுடன் வெகு சீக்கிரத்தில் படப்பிடிப்பை துவங்க வேண்டுமாம். ரஜினி, கார்த்திக் படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். எனவே, மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க மும்மரமாக உள்ளனர் படக்குழுவினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தாவின் அடுத்த படத்திற்கு 'UA' சான்றிதழ்