Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜமௌலி படத்தில் இணைந்த பிரித்விராஜ்… துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!

Advertiesment
ராஜமௌலி படத்தில் இணைந்த பிரித்விராஜ்… துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!

vinoth

, வெள்ளி, 14 மார்ச் 2025 (10:14 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

இந்த படத்தில் தானும் இருப்பதை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் உறுதி செய்தார். சமீபகாலமாக பிரியங்கா சோப்ரா இந்திய படங்கள் எதிலும் நடிக்காமல் ஹாலிவுட் சீரிஸ்கள் மற்றும் படங்களில் கவனம் செலுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஒடிசாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள அம்மாநில துணை முதல்வர் ப்ரவதி பரிதா “எங்கள் மாநிலத்துக்குப் படப்பிடிப்புக்காக வந்துள்ள ராஜமௌலி, மகேஷ்பாபு, பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை வரவேற்கிறோம்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் இந்த படத்தில் பிரித்விராஜ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?