Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்ரம்மை வைத்து இயக்க இருந்த படம் என்ன ஆனது?... பிரேம்குமார் பகிர்ந்த தகவல்!

Advertiesment
Karthi

vinoth

, வியாழன், 11 செப்டம்பர் 2025 (11:51 IST)
96  என்ற மென்சோகப் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.

இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோரே நடிப்பார்கள் என்றும் இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டு, அதே நிறுவனத்துக்காக விக்ரம்மை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் அந்த படமும் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. தற்போது பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் விக்ரம் நடிப்பில் உருவாக இருந்த படம் பற்றிய கேள்விக்கு “அந்த படத்துக்கான திரைக்கதையை இனிமேல்தான் எழுத வேண்டும். அதற்கான நேரம் அமையும் போது எழுதுவேன். அதற்கு ஒரு ஆறு மாதம் தேவைப்படும்” எனக் கூறியுள்ளார். அதனால் தற்போதைக்கு அந்த படம் தொடங்கப்படாது என சூசகமாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடலைப் பயன்படுத்த அனுமதிக் கேட்ட புதுமுக இயக்குனர்… காசே வாங்காமல் ஒரு ஃபோனையும் பரிசாகக் கொடுத்த TR!