Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளிக்கு அப்புறமும் பொன்னியின் செல்வன் ஓடுமா?... தீபாவளிப் படங்களுக்கு சிக்கல்!

தீபாவளிக்கு அப்புறமும் பொன்னியின் செல்வன் ஓடுமா?... தீபாவளிப் படங்களுக்கு சிக்கல்!
, செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:53 IST)
கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 12 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த வசூலில் கிட்டத்தட்ட பாதியளவு தமிழ்நாட்டில் இருந்துதான் வந்துள்ளது. தற்போது வரை பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 206 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இன்னும் பல திரையரங்குகளில் கணிசமான கூட்டத்தோடு படம் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு சர்தார், பிரின்ஸ் என இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தீபாவளிக்கு பிறகு மல்டிப்ளக்ஸ்களில் இந்த படம் தொடர்ந்து ஓடிக்கொண்டுதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் தீபாவளி ரிலீஸ் படங்களில் ஏதாவது ஒன்று சொதப்பினாலும், அதற்கு திரைக் குறைக்கப்பட்டு மீண்டும் பொன்னியின் செல்வனுக்கான திரைகள் அதிகமாகக் கூடும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!