Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு! மீரா மிதுனுக்கு காவல்துறை சம்மன்!

பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு! மீரா மிதுனுக்கு காவல்துறை சம்மன்!
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:27 IST)
பட்டியலின மக்களை இழிவாக பேசிய விவகாரத்தில் மீரா மிதுன் நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பிரபல மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். தொடர்ந்து படங்கள் சிலவற்றில் நடித்து வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த மீரா மிதுன் அதில் தாழ்த்தப்பட்ட சமூகம் ஒன்றை கேவலமாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கெடு வைத்து படம் எடுக்கும் மிஷ்கின்!