Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடவுளின் விதியை மக்கள் மாற்றி எழுதுகின்றனர்! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரவீன் பதிவு..!

Advertiesment
பிக் பாஸ்

Mahendran

, திங்கள், 10 நவம்பர் 2025 (18:08 IST)
'பிக் பாஸ் சீசன் 9' நிகழ்ச்சியின் ஐந்தாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட போட்டியாளரான பிரவீன் ராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
 
போட்டிகளில் சிறப்பாக பங்களித்த தான் வெளியேற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அதனால் மனமுடைந்துவிட்டதாகவும் பிரவீன் தெரிவித்தார்.
 
"வெளியே வந்த பிறகுதான் மக்கள் என்மீது அன்பை பொழிவது தெரிந்தது," என்று கூறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 
அவர் பேசுகையில், "கடவுள் ஒரு விதியை நம் மீது எழுதினால், அதனைத் திருத்தி மக்கள் வேறு ஒன்றை எழுதுகிறார்கள்" என்று தனது வெளியேற்றத்தை மக்கள் நிராகரித்த விதத்தை குறிப்பிட்டார்.
 
இந்த வெளியேற்றம் ஒரு முடிவல்ல, மாறாக ரசிகர்களின் அன்பால் தனக்கு ஒரு புதிய தொடக்கம் கிடைத்துள்ளதாக பிரவீன் ராஜ் தெரிவித்தார். தனது திறமையை எப்போதும் விசுவாசமாக வெளிப்படுத்துவேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளாமர் லுக்கில் சுண்டியிழுக்கும் ஜான்வி கபூர்… கார்ஜியஸ் போட்டோஷூட்!