20 நாட்களுக்கு பின் கொரோனாவில் இருந்து குணமான பிரபல நடிகர்!

Webdunia
சனி, 8 மே 2021 (16:41 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் 20 நாட்களுக்கு பின் தற்போது குணமாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தெலுங்கு திரையுலகில் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் ஏப்ரல் 16-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும் அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அவரது ஜனசேனா கட்சி அதிகாரபூர்வமாக பவன் கல்யாண் குணம் ஆகி விட்டதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் ஆனாலும் இன்னும் சில நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்த வேண்டும் என்பதால் இப்போதைக்கு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்று பவன் கல்யாண் வட்டாரங்கள் கூறுகின்றன
 
இருப்பினும் பவன் கல்யான் குணமடைந்தது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments