Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த தகவல்

பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த தகவல்
, புதன், 18 டிசம்பர் 2019 (06:43 IST)
அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்
 
இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காலா படத்துக்கு பிறகு ரஞ்சித் எந்த படத்தையும் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல் வரவில்லை. ஒரு சில தகவல்கள் வெளி வந்தாலும் அந்த படங்களின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
webdunia
இந்த நிலையில் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் அடுத்து ஐந்து படங்களை தயாரிக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். முதல் படத்தை ‘மேற்கு தொடர்ச்சி மலை’ இயக்குனர் லெனின் பாரதி பார்வை இயக்க இருப்பதாகவும், இரண்டாவது படத்தை பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை முடித்தவுடன் இந்த படத்தை இயக்குவார் 
 
இதனை அடுத்து சுரேஷ்மாரி, அகிரன் மோசஸ் மற்றும் பிராங்க்ளின் ஜோசப் ஆகிய மூவர் தலா ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. பா ரஞ்சித்தின் இந்த ஐந்து படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ்-கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் இணைந்த பிரபல நடிகை