Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஞ்சித் படத்துக்கு தியேட்டர்கள் இல்லை – ஏன் தெரியுமா ?

ரஞ்சித் படத்துக்கு தியேட்டர்கள் இல்லை – ஏன் தெரியுமா ?
, வெள்ளி, 6 டிசம்பர் 2019 (08:03 IST)
பா ரஞ்சித் தயாரித்துள்ள குண்டு படத்துக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் திரையரங்குகள் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன் பரியேறும் பெருமாளுக்குப் பிறகு இரண்டாவது படமாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு தயாரித்துள்ளது. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழகம் முழுவதும் இன்று ரிலிஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கு தென் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் திரையரங்குகள் கிடைக்காத சூழல் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணமாக பா ரஞ்சித் தொடர்ந்து தமிழக பொதுவெளிகளில் தலித் அரசியலைப் பேசி வருவதுதான் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பற்றிய புதிய அப்டேட்