Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பதற்றம் இல்லாமல் தூங்கினேன்… இயக்குனரின் கலைஞராக இருக்க விரும்புகிறேன் – நிமிஷா சஜயன்!

Advertiesment
அதர்வா

vinoth

, வெள்ளி, 27 ஜூன் 2025 (11:25 IST)
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பாலாவின் பரதேசி மற்றும் சற்குணத்தின் சண்டிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் அவரால் பெரியளவில் ஹிட் கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டி என் ஏ படத்தின் மூலம் ஒரு வணிக-விமர்சன வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த படத்தில் அவருடன் நிமிஷா சஜயன் நடிக்க நெல்சன் வெங்கடேசன் இயக்கினார். ஒலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத்குமார் தயாரித்திருந்தார். இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் பற்றி பேசியுள்ள நிமிஷா சஜயன் “ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் பதற்றமாக இருக்கும். ஆனால் இந்த படம் ரிலீஸான போது கிடைத்த விமர்சனங்களால் நிம்மதியாக பதற்றம் இல்லாமல் தூங்கினேன். இந்த படத்தில் எனது நடிப்பு சிறப்பாக உள்ளதாக பாராட்டுகள் வருகின்றன. அது எல்லாமே இயக்குனரையே சாரும். நான் எப்போதும் இயக்குனரின் கலைஞராகவே இருக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியோடு இணைந்து ‘கூலி’ படத்தில் நடனம் ஆடுகிறாரா டி ஆர்?