Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா- விக்னேஷ் சிவன் செயலால் ஒப்பந்தத்தை ரத்து செய்த ஓடிடி நிறுவனம்?

நயன்தாரா- விக்னேஷ் சிவன்  செயலால்  ஒப்பந்தத்தை ரத்து செய்த ஓடிடி நிறுவனம்?
, சனி, 16 ஜூலை 2022 (17:23 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டனர். இந்த திருமணத்துக்குப் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படவில்லை. அதுபோல கலந்துகொண்ட பிரபலங்களுக்கும் செல்போன் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் நயன்தாரா திருமண வீடியோ முன்னணி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ஓடிடி தளம் ஒன்று 25 கோடி ரூபாய் வரை நயன்தாரா தம்பதிகளுக்கு கொடுத்ததாக தகவல்கள் பரவின. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில் இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில்,ஓடிடி நிறுவனம் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளது. இத்திருமணத்திபோது, விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.  அவை ஊடகத்திற்கும் பகிர்ந்திருந்தார்.

ஆனால்  நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் ஓடிடி நிறுவனத்தினுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படிம் அவர்களின் அனுமதி இல்லாமல் சில புகைப்படங்களை வெளியிட்டதாகவும் அதனால், அந்த  ஓப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகிறது.

இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருள் நிதிக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை?