Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகனாக இருப்பது சலிப்பாக உள்ளது… இயக்குனர் மிஷ்கின் கருத்து!

vinoth
வெள்ளி, 13 ஜூன் 2025 (10:00 IST)
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் நந்தலாலா உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மிஷ்கின் இயக்கிய படம் ஒன்று ரிலீஸாகி கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் இயக்கிய பிசாசு 2 மற்றும் டிரைன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளன. இதற்கிடையில் மிஷ்கின் நடிகராக அறிமுகமாகி நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் நடிகனாக இருப்பது சலிப்பைத் தருவதாக மிஷ்கின் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “எனக்கு நடிப்பது பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு தினமும் 10 அழைப்புகள் நடிக்க வருகின்றன. அதை தவிர்ப்பதற்காக நான் அதிக சம்பளம் கேட்கிறேன். ஆனால் அதையும் தரத் தயாராக இருக்கிறார்கள். என்னுடைய நடிப்பு இன்னும் கொஞ்ச காலத்தில் ரசிகர்களுக்கு சலிப்பைத் தந்துவிடும் என நினைக்கிறேன். அதன் பின்னர் நான் முழுவதுமாக இயக்கத்தில் இறங்கிவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையேக் கேட்காமல் அந்த படத்தில் நடிக்க ‘ஓகே’ சொன்னேன் –அமீர்கான் பகிர்ந்த தகவல்!

கைவிடப்படுகிறதா விக்ரம்-மடோன் அஸ்வின் இணையவிருந்த படம்?

சினிமாவில் நான் சந்தோஷமாக இல்லை… சீக்கிரம் வெளியேறிவிடுவேன் –மிஷ்கின் பேச்சு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments