Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்டம் மனிதர்கள் விளையாடுவது அல்ல..! – இயக்குனர் மோகன்ஜீ எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (12:18 IST)
சென்னையில் வங்கி அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது குறித்து இயக்குனர் மோகன்ஜீ எச்சரித்துள்ளார்.

சென்னையில் வங்கி அதிகாரி ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் சுமையால் குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இயக்குனர் மோகன்ஜீ இதுகுறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ஆன்லைன் விளையாட்டு நீங்கள் நினைப்பது போல மனிதர்களுக்குள் மட்டும் விளையாடும் விளையாட்டு அல்ல.. Bot எனப்படும் அவர்களே program செய்து வெற்றி மட்டுமே பெறும் தன்மை கொண்ட மனிதர்கள் போல வெவ்வேறு பெயர்களால் வடிவமைக்கப்பட்ட போலிகள். நீங்கள் மனிதர்களுடன் விளையாடுவதாக நினைத்து பணத்தை இழந்து பின் வாழ்வை இழக்காதீர்கள்.. ஆன்லைனில் பணம் கட்டி விளையாடுவது ஒரு மாய உலகம்.. விட்டவர்கள் தான் உண்டு.. வென்றவர்களை பார்ப்பது அரிது.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments