Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சிம்பு படத்துக்கு பிரச்சனைக் கிளப்பும் தயாரிப்பாளர்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (09:50 IST)
நடிகர் சிம்பு நடிக்கும் நதிகளில் நீராடும் சூரியன் திரைப்படம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட இருந்தது.

சிம்பு மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்திற்கு ’நதியினிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கிரித்தி சனோன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் திருச்செந் நடக்க இருந்த நிலையில் சிம்பு நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு தர வேண்டிய பணத்தை தரவேண்டும் எனவும் அதைத் தரும் வரையில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம். இது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதே துள்ளல், அதே காமெடி, அதே ஃபைட்.. விஜய்யின் ‘சச்சின்’ டிரைலர் ரிலீஸ்..!

'சிம்பு 49’ படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

எதிர்கால சினிமா இப்படிதான் இருக்கப் போகிறதா?... ‘குட் பேட் அக்லி’ வெற்றி சொல்வது என்ன?

ஸ்ரீயை அவரது குடும்பத்தினார் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை… பிரபல தயாரிப்பாளர் பதிவு!

பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் கலைப்புலி ஜி சேகரன் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments