Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்செந்தூருக்கு செல்லும் சிம்பு படக்குழு!

திருச்செந்தூருக்கு செல்லும் சிம்பு படக்குழு!
, சனி, 31 ஜூலை 2021 (15:54 IST)
சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்பு மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்திற்கு ’நதியினிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்க உள்ளதாகவும், இதற்காக படக்குழு அங்கு செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பிணி மனைவியுடன் குத்தாட்டம் போட்ட சாண்டி - வைரல் வீடியோ