Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி?

கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி?
, சனி, 31 ஜூலை 2021 (16:41 IST)
நடிகர் சிம்பு இயக்குனர் கௌரவ் இயக்கத்தில் கொரோனா குமார் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ஜூங்கா ஆகிய படங்களையும் கார்த்தி நடித்த ’காஷ்மோரா’ படத்தையும் இயக்கியவர் இயக்குனர் கோகுல். இவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் அந்த படத்தின் டைட்டில்தான். ’கொரோனா குமார்’. என்று அறிவிக்கப்பட்ட  படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை விஜய் சேதுபதியே நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் சந்தானம் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இயக்குனர் கோகுல் சிம்புவை வைத்து அந்த படத்தை இயக்க உள்ளதாகவும் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை சிம்பு ஒப்புக்கொண்டதற்கு காரணம் அவரின் நண்பர்கள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இயக்குனர் கௌரவ் கதை சொல்லும்போது சிம்புவின் நண்பர்கள் கூட இருந்ததாகவும், அதை அவர்கள் முழுமையாக ரசித்ததாகவும் அவர்கள்தான் இந்த படத்தில் நடிக்க பரிந்துரைத்ததாகவும் சொல்லப்படுகிறது,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் அட்டகத்தி தினேஷ் படத்தைத் தயாரிக்கும் பா ரஞ்சித்!