Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்ன விக்ரம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்ன விக்ரம்!
, வியாழன், 6 ஏப்ரல் 2023 (09:22 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார். ஆனால் இப்போது இந்த படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். அதற்குக் காரணம் மாரி செல்வராஜ் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலினை இயக்க முடிவு செய்ததுதான். அந்த படத்தை முடித்த மாரி செல்வராஜ் வாழை என்ற தான் தயாரித்து இயக்கும் படத்தைத் தொடங்கினார்.

இதையடுத்து தனது அடுத்த படமாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் விக்ரமுக்காக ஒரு கதையை சொல்லி, அதற்கு சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படம் உடனடியாக தொடங்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த ரிலீஸ் சூர்யா 42 இல்லையாம்.. இந்த படம்தானாம்!