Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தொடங்குகிறதா மணிரத்னத்தின் ‘தக்லைஃப்’ படத்தின் ஷூட்டிங்?

Advertiesment
மீண்டும் தொடங்குகிறதா மணிரத்னத்தின் ‘தக்லைஃப்’ படத்தின் ஷூட்டிங்?

vinoth

, புதன், 30 அக்டோபர் 2024 (09:52 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்றார் இயக்குனர் மணிரத்னம். இதையடுத்து அவர் இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் அடுத்த ஆண்டு ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்ததாக சொல்லப்படும் நிலையில் தற்போது சிம்பு மற்றும் திரிஷா ஆகியோரை வைத்து சிலக் காட்சிகளை டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் மணிரத்னம் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த ஒருவார கால ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்ட்ரியா நடிப்பில் கோபி நயினார் இயக்கிய ‘மனுஷி’ படத்துக்கு சென்சாரில் சிக்கல்?