Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘என் தம்பிக்கு நான் செய்வேண்டா’… அட்லிக்காக இறங்கி வருகிறாரா விஜய்?

‘என் தம்பிக்கு நான் செய்வேண்டா’… அட்லிக்காக இறங்கி வருகிறாரா விஜய்?

vinoth

, செவ்வாய், 22 அக்டோபர் 2024 (14:53 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.

இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் சல்மான் கானோடு கமல்ஹாசனும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு மட்டும் கௌரவத் தோற்றத்தில் நடனமாட ஒப்புக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அட்லியுடனான நட்பின் காரணமாக இந்த முடிவுக்கு விஜய் சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமரன் படத்தின் டிரைலர் வெளியீடு எப்போது? வெளியான அறிவிப்பு!