2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
மற்ற இரு நடிகைகளை விட மடோன்னா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சமீபத்தில் விஜய்யின் லியோ படத்தில் அவரின் சகோதரி வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்தால் அவருக்கு பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது தெலுங்கில் உருவாகவுள்ள பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது குறித்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அதில் “கவர்ச்சியாக நடிப்பது தவறில்லை. அதுவும் நடிப்பின் ஒரு பரிணாமம்தான். கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரிந்தால் போதும்” எனக் கூறியுள்ளார்.