Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாவீரன் படம் பற்றி பரவும் பொய்யான தகவல்கள்… பதறியடித்து விளக்கம் அளித்த தயாரிப்பு நிறுவனம்!

மாவீரன் படம் பற்றி பரவும் பொய்யான தகவல்கள்… பதறியடித்து விளக்கம் அளித்த தயாரிப்பு நிறுவனம்!
, வியாழன், 26 ஜனவரி 2023 (14:37 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் எடுத்த காட்சிகளை மீண்டும் ரி ஷூட் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் மோதல் உச்சத்தை எட்டி படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பும் சமாதானமாகி படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கி நடந்துவரும் நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் எடுத்த பல காட்சிகளை ரி ஷூட் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஷூட்டிங் முடிய எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் ஆகும் என சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவ அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

அதில் “அடிப்படையற்ற பொய்யான தகவல்கள் இணையத்தில் மாவீரன் திரைப்படம் பற்றி பரவி வருகின்றன. நீங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். நினைவில் நிற்கும் ஒரு படமாக மாவீரன் உருவாகி வருகிறது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் தேவரகொண்டாவுடன் ‘டூர்’ சென்றால் என்ன தவறு?- ராஷ்மிகா ஆவேசம்!