தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.
தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்து விட்டு கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கூலி படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் நேர்காணல்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதில் “கூலி எத்தனை சதவீதம் ரஜினி படம் எத்தனை சதவீதம் லோகேஷ் படம்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “முன்பு ஒருமுறை நான் இந்த கேள்விக்கு பதில் சொல்லி மாட்டிக் கொண்டேன். அதனால் இனிமேல் அப்படி சொல்லப் போவதில்ல.” எனக் கூறியுள்ளார்.