Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூலி படத்தில் பஹத் பாசில் நடிக்காதது ஏன்?... இயக்குனர் லோகேஷ் சொன்ன காரணம்!

Advertiesment
லோகேஷ் கனகராஜ்

vinoth

, புதன், 16 ஜூலை 2025 (10:45 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்து விட்டு கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவரளித்த நேர்காணலில் கூலி படத்தில் தனது நண்பரும் நடிகருமான பஹத் பாசில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “இந்த படத்தில் சௌபின் சாஹிர் நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க பஹத் பாசிலைதான் கேட்டோம். ஆனால் அவரது கால்ஷீட் பிரச்சனைகள் காரணமாக அவரால் நடிக்கமுடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் epic நகைச்சுவைக் கூட்டணி… புதிய படம் அறிவிப்பு!