Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குக்கூ குக்கூ… கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாறிய எஞ்சாயி எஞ்சாமி!

Advertiesment
எஞ்சாய் எஞ்சாமி
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:09 IST)
மிகப்பெரிய ஹிட்டாகியுள்ள எஞ்சாயி எஞ்சாமி பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றியுள்ளனர் கேரள போலீஸார்.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு  எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இப்போது இந்த பாடல் யுடியுபில் 15 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் பெரிய நடிகர்களின் சினிமாப் பாடல்களுக்குக் கூட கிடைக்காத வரவேற்பு இந்த தனியிசைப் பாடலுக்குக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடலின் வரிகளை மாற்றி கேரள போலிஸார் கொரோனா விழிப்புணர்வுக்காக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த பாடல் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியாவின் மிக பிரம்மாண்ட படம்!