Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஏலக்காய் !!

பல உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஏலக்காய் !!
இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல், அழற்சி, சிறுநீரகக் கல், நரம்பு தளர்ச்சி மற்றும் பலவீனம் போக்க ஏலக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

பல் துலக்கிய பிறகும் பலருக்கு துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றத்தின் சிக்கலை நீக்க பல வகையான வாய் புத்துணர்ச்சிகளும் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால்  பயனில்லை. 
 
சுவாசத்தின் வாசனையை நீக்க விரும்பினால், ஒவ்வொரு நாளும் உணவு சாப்பிட்ட பிறகு ஏலக்காய் சாப்பிடுங்கள். இதைச் செய்வதன் மூலம், சுவாசத்திலிருந்து வரும் துர்நாற்றம் நீங்கும்.
 
ஏலக்காயுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி குணமாகும்.
 
ஏலக்காயுடன், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அஜீரணக் கோளாறு விலகிவிடும்.
 
பலவீனமான செரிமான அமைப்பு காரணமாக வயிறு தொடர்பான பிற பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமாக  இருக்க தினமும் ஏலக்காயை சாப்பிடுங்கள், ஏலக்காயில் காணப்படும் பண்புகள் வயிற்றுப் பிரச்சினைகளை நீக்கி செரிமான அமைப்பை வலிமையாக்குகின்றன.
 
தொண்டை புண் இருந்தால், பச்சை ஏலக்காய், ஒரு துண்டு இஞ்சி, கிராம்பு, மூன்று நான்கு துளசி இலைகள் கலந்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை சாப்பிடுவதன் மூலம், தொண்டை புண் மாறிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!