Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை வருகிறது 14 ஆயிரம் கியூபிக் லிட்டர் ஆக்சிஜன்: பற்றாக்குறை தீருமா?

சென்னை வருகிறது 14 ஆயிரம் கியூபிக் லிட்டர் ஆக்சிஜன்: பற்றாக்குறை தீருமா?
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (18:52 IST)
நெல்லை மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் 14 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 14 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலம் சென்னையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது 
 
இதேபோல் வாரத்திற்கு ஒரு முறை இங்கிருந்து ஆக்சிஜன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுவதால் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதியிலுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்த மருத்துவர் வீரபாபுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு!