Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!

Advertiesment
சுந்தர் சி

Siva

, புதன், 16 ஏப்ரல் 2025 (18:09 IST)
சுந்தர் சி இயக்கத்தில் முதல்முறையாக கார்த்தி நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாறு இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
சுந்தர் சி தற்போது ’மூக்குத்தி அம்மன் 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும், நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.
 
அதேபோல், சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்து வரும் கார்த்தி, அடுத்ததாக ’கைதி 2’  உள்ளிட்ட சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
 
இந்த நிலையில், சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில், அதாவது நவம்பர் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும், இந்த படத்தை கார்த்தியின் பல படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அது மட்டும் இன்றி, பையா மற்றும் தோழா படங்களுக்கு பிறகு, நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் கார்த்தி ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹோம்லி லுக்கில் ஸ்டன்னிங் ஆல்பத்தை வெளியிட்ட ஷிவானி!