Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த சுந்தர் சி & கார்த்தி இணையும் படம்!

Advertiesment
சுந்தர் சி

vinoth

, புதன், 16 ஏப்ரல் 2025 (16:39 IST)
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சுந்தர் சி ஒரு வெற்றிகரமான இயக்குனராக உள்ளார். கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதுதான், அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் மிகப்பெரிய பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் கார்த்தி, சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் இருவரும் இது சம்மந்தமாக சந்தித்துப் பேசியுள்ளதாகவும் இந்த படத்தை கார்த்தியின் நண்பரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் இந்த படத்தைத் தொடங்க உள்ளதாகவும் குறுகிய கால படமாக உருவாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக சுந்தர் சி முன்பணம் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பட்டியலில் இணைந்த வெங்கட் அட்லூரி!