Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா – ஜீது ஜோசப்பின் அடுத்த த்ரில்லர் !

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா – ஜீது ஜோசப்பின் அடுத்த த்ரில்லர் !
, வியாழன், 7 மார்ச் 2019 (09:18 IST)
கார்த்தியும் ஜோதிகாவும் அடுத்ததாக ஒரு த்ரில்லர் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான தேவ் படம் படுதோல்வி அடைந்துள்ளது. அதனையடுத்து அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க கார்த்தி ஒப்பந்தம் ஆகி வருகிறார். தற்போது அவர் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒருப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியே கிடையாது. இப்படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் படத்திற்கு இப்போது ‘கைதி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை முடித்தவுடன் அடுத்து கார்த்தி பாபநாசம் புகழ் ஜீது ஜோசப் இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க சம்மதித்திருக்கிறார்.

இருவரும் தற்போது வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆர்-சிவாஜி நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி' நாயகி காலமானார்