Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா காலத்தில் கொண்டாட்ட வீடியோ! ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிய இயக்குனர்!

கொரோனா காலத்தில் கொண்டாட்ட வீடியோ! ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிய இயக்குனர்!
, திங்கள், 27 ஏப்ரல் 2020 (08:44 IST)
கொரோனா காலத்தில் தான் மிகவும் ஜாலியாக இருப்பது போல பல வீடியோக்களை வெளியிட்ட பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். ஆனால் இயக்குனர் கரன் ஜோஹரோ தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கடுப்பேற்றினார்.

இந்நிலையில் கரணின் வீடியோக்களுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், தங்கள் உயிரை பொருட்பாடுத்தாது வேலை செய்கின்றனர். இதுபோன்ற நேரத்தில், கரன் ஜோஹர் இதுபோல வீடியோ வெளியிடலாமா எனக் கேள்வியெழுப்பினர்.

இதையடுத்து இயக்குனர் கரன் ஜோஹர் ‘போதிய பக்குவம் இல்லாமல், இதுபோல் செய்து விட்டேன். அதற்காக வருந்துகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் கொடுத்த 5000 ரூபாயை அஜித் ரசிகருக்கு கொடுத்த விஜய் ரசிகர்