Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து வந்த மரணங்கள்… காந்தாரா ரிலீஸில் மாற்றமா?- படக்குழு வெளியிட்ட அப்டேட்!

vinoth
வெள்ளி, 23 மே 2025 (15:00 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள். படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியிருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அடுத்தடுத்து படக்குழுவினர் சிலர் மரணமடைந்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், திட்டமிட்ட தேதியில் படம் ரிலீஸாகாது என்றும் தகவல்கள் பரவின. ஆனால் அதைப் படக்குழு மறுத்துள்ளது. இது சம்மந்தமாக சமூகவலைதளப் பக்கத்தில் “நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். எல்லாம் திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கிறது. காந்தாரா சாப்டர் 1 திட்டமிட்டபடி அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகும்.  எங்களை நம்புங்கள். உங்கள் காத்திருப்பு மதிப்புக்குரியதாக அமையும்.” எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன்!

மாறி மாறி அறிக்கை விடுவதற்கு ஏன் கோர்ட்டுக்கு வருகிறீர்கள்.. ரவி மோகன், ஆர்த்தியை கண்டித்த நீதிபதி..!

நயன்தாராவை கொஞ்சம் விசாரிச்சா எல்லா உண்மையும் வெளியே வந்துடும்: ரத்தீஸ் குறித்து மாரிதாஸ்

கூலி படத்துக்கு யானை விலை சொல்லும் சன் பிக்சர்ஸ்… தயங்கும் விநியோகஸ்தர்கள்!

நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்.. ஆர்த்தி ரவியை மறைமுகமாக தாக்கினாரா கெனிஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments