ஆர்யா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவான பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு முக்கியக் காரணமாக சந்தானம்- ஆர்யா கூட்டணியின் நகைச்சுவையும் அமைந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இரண்டாம் பாகம் உருவாக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆர்யா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் ராஜேஷ் “பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்துக்காக நல்ல கதையை எழுதியுள்ளோம். ஆர்யா மற்றும் சந்தானம் கூட்டணி அமைந்தால் செம்மையாக வரும். ” எனக் கூறியுள்ளார். சந்தானம் தற்போது சிம்பு 49 மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் –இரண்டாம் பாகம் ஆகிய படங்களின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.