பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்ததாகப் படக்குழு அறிவித்தது.
அதன் பின்னர் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஷ்யன் மொழியில் டப் செய்யப்பட்டு நவம்பர் 1 ஆம் தேதி ரிலீஸானது. முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் படம் ரிலீஸாகி 8 மாதங்கள் ஆகியும் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்புத் தொடங்கப்படவில்லை. இது குறித்துப் பேசியுள்ள இயக்குனர் நாக் அஸ்வின் “டிசம்பர் மாதம் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங்கைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.