Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘நான் சொன்ன கதையைக் கேட்டு பயந்தார்கள்’… விக்ரம் திரைப்படம் குறித்து கமல் சுவாரஸ்ய தகவல்!

‘நான் சொன்ன கதையைக் கேட்டு பயந்தார்கள்’… விக்ரம் திரைப்படம் குறித்து கமல் சுவாரஸ்ய தகவல்!
, வியாழன், 26 மே 2022 (11:12 IST)
கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதையடுத்து படத்துக்காக வித்தியாசமான முறையில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது படம் பற்றி பேசிய கமல் ‘நான் பழைய விக்ரம் படத்தின் போது ஒரு லைன் கூறினேன். அது ரொம்ப அட்வான்ஸாக இருப்பதாக இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்ட பலரும் பயந்தார்கள். ஆனால் சுஜாதா மட்டும் அதை ரசித்தார். அந்த லைனை இப்போது லோகேஷிடம் கூறினேன். அவர் அதைக் கேட்டு உடனடியாக பிடித்திருக்கிறது எனக் கூறி அதை திரைக்கதையாக்கி விக்ரம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்” என்று கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் டப் ஆகும் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’… இளையராஜா கொடுத்த சர்ப்ரைஸ்!