Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’தக்லைஃப்’ பற்றி இனி கவலையில்லை.. அடுத்த படத்தின் வேலையை தொடங்கிய கமல்..!

Advertiesment
Kamal Haasan

Siva

, புதன், 4 ஜூன் 2025 (17:04 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தக்லைஃப்’ திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட புரமோஷன் பணிகளை முழுமையாக முடித்துவிட்ட கமல்ஹாசன், இந்த படத்தின் சர்ச்சைகளை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்த படத்தின் பணியைத் துவக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, முழுக்க முழுக்க சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. "மலையூர் மம்பட்டியான்" தியாகராஜன் போன்ற கெட்டப் தான் கமல்ஹாசனுக்கு என்றும், இந்த படத்தில் அவருடைய கேரக்டர் நெகட்டிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும், ஒரே ஷெட்யூலில் கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தை முடிப்பதற்காக இயக்குனர்கள் அன்பறிவ் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு முடிந்துவிட்டதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!