கமல்ஹாசனின் தக்லைப் பிரச்சனைக்கு, ஒட்டுமொத்த தமிழ் திரை உலகமே அமைதியாக உள்ளது என்றும், பெரிய நடிகர்கள் உட்பட யாருமே கமல்ஹாசனுக்கு வெளிப்படையாக ஆதரவு தர முன்வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
"தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்" என்று கமல்ஹாசன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, கர்நாடக மாநில திரைப்பட வர்த்தக சமயம், தக்லைப் திரைப்படத்தை வெளியிட தடை விதித்தது. நீதிமன்றமும் கமலுக்கு சாதகமாக உத்தரவை வழங்காத நிலையில், கர்நாடக மாநிலத்தில் இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் உள்ளது.
இந்த நிலையில், கமல்ஹாசனின் இந்த பிரச்சனைக்கு ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், உள்பட யாருமே என் குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த சிம்பு கூட மௌனமாக இருப்பது, அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.