Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

Advertiesment
kamal -thug life

Mahendran

, புதன், 4 ஜூன் 2025 (14:00 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில், ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவான ’தக்லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
நாளை ஒரே நாளுக்கு மட்டும் தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதன்படி நாளை காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்றும், கடைசி காட்சி நாளை இரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நாளை ஒரே நாளுக்கு மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ’தக்லைஃப்’ திரைப்படம் ஐந்து காட்சிகள் திரையிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நாளை போட்டிக்கு வேறு எந்த பெரிய படமும் வெளியாகவில்லை என்பதை எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ’தக்லைஃப்’ திரைப்படமே வெளியாகும் என்பதும், ஆரம்பகட்ட வசூல் அபாரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் பிரச்சனையில் மெளனமான பிரபலங்கள்.. ரஜினி, விஜய், அஜித், சூர்யா வாய் திறக்காதது ஏன்?