Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேவர் மகன் பாடலுக்காக மன்னிப்புக் கேட்ட கமல் !

தேவர் மகன் பாடலுக்காக மன்னிப்புக் கேட்ட கமல் !
, வியாழன், 24 அக்டோபர் 2019 (16:25 IST)
தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற போற்றி பாடடி பொன்னே பாடலுக்காக கமல்ஹாசன் தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் கிளாசிக்குகளில் தேவர் மகன் படத்துக்கு என்றும் நிலையான இடம் உண்டு. காட்பாதர் படத்தைத் தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதை, கமல்-சிவாஜி காம்பினேஷன், இளையராஜாவின் இசை, பி சி ஸ்ரீராமின் நேர்த்தியான ஒளிப்பதிவு என பல்வேறு மாஸ்டர்களின் கைவண்ணத்தில் உருவானப் படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள போற்றி பாடடி பொன்னே எனும் பாடலால் தென் தமிழகத்தில் பல சாதி கலவரங்கள் நடைபெற்றன. சாதி மற்றும் வன்முறைக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் மூலமே வன்முறைகள் உருவானது விவாதத்துக்குள்ளானது. இந்நிலையில் இன்றளவும் சாதிப் போற்றி பாடலாக இருந்து வரும் அந்த பாடலுக்கு மன்னிப்புத் தெரிவித்து கமல் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் விகடனுக்கு அளித்த நேர்காணலில் ‘ அந்த பாடலுக்காக நானும் இளையராஜாவும், உயிரோடு இல்லாத வாலியும் சேர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் எந்த உள்ளர்த்தமும் கொண்டு அந்த பாடலை உருவாக்கவில்லை. இப்போது அந்த படத்தை உருவாக்கினால் நான் தேவர் மகன் எனப் பெயர் வைக்கமாட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சல்மான் கான் தம்பியின் முன்னாள் மனைவியுடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட அர்ஜுன் கபூர்!