கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். கடந்த ஆண்டு அந்த படத்தின் பூஜை நடந்தது. விரைவில் ஷூட்டிங் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல மாதங்களாக அதுபற்றி எந்த அப்டேட்டும் வரவில்லை.
இந்நிலையில் தற்போது ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இன்னும் ஜூனியர் என் டி ஆர் இந்த ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை. அவர் மார்ச் மாதத்தில் இருந்து கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. தற்போது அவர் இல்லாதக் காட்சிகளை பிரசாந்த் நீல் படமாக்கி வருகிறார்.