மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
இதையடுத்து 2020 ஆம் ஆண்டு திரிஷ்யம் 2 ஆம் பாகம் வெளியாகி நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த பாகமும் வெற்றி பெற்று தமிழைத் தவிர பிற மொழிகளில் எல்லாம் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது மூன்றாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த முறை மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் ஷூட்டிங் தொடங்கி ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்தி த்ரிஷ்யம்-3 படத்துக்கான ரிலீஸ் தேதியையேப் படக்குழுவினர் அறிவித்தனர். அடுத்த ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரிலீஸாகும் என தெரிவித்துள்ளனர். இதனால் த்ரிஷ்யம் இந்தி பதிப்பும் மலையாளப் பதிப்பும் வேறு வேறு கதைகள் என்ற வதந்தி பரவி வருகிறது.
இது குறித்து விளக்கமளித்துள்ள ஜீத்து ஜோசப் “இந்தியில் வேறு கதையை அவர்கள் படமாக்கவில்லை. என்னுடைய கதையை ஒட்டிதான் படமாக்கவுள்ளனர். நான் திரைக்கதையை முடித்ததும் அவர்களிடம் கொடுப்பேன். அதை அவர்கள் அவர்களுக்கேற்றவாறு மாற்றிக் கொள்வார்கள்” எனக் கூறியுள்ளார்.