Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிடிவாதத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் பாடிய ஜானகி!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (13:47 IST)
1950-களின் இறுதியில் தொடங்கி 1980, 1990-களில் உச்சத்தில் இருந்தவர் பாடகி எஸ்.ஜானகி. இவரது கொஞ்சும் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தார். ஏசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. 
 



தற்போது 80 வயதாகும் ஜானகி, இனி சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாடுவதில்லை என கடந்தாண்டு அறிவித்து விட்டு, ஐதராபாத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். 
 
இந்நிலையில் தனது கட்டுப்பாட்டை தளர்த்திவிட்டு மீண்டும் பாட வந்துள்ளார்.  டி.ஆர்.பழனிவேலன் என்பவர் இயக்கும் 'பண்ணாடி' என்ற படத்தில் பாடகி எஸ்.ஜானகி ஒரு பாடலை பாடியுள்ளார். இதில் ஆர்.வி.உதயகுமார், வேல.ராமமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இதை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழனிவேலன் தயாரிக்கிறார். 
 
படத்திற்கு இசையமைக்கும், ராஜேஷ் ராமலிங்கம் இதுகுறித்து கூறியதாவது,‘எஸ்.ஜானகியை அணுகிய போது, புதிய பாடகிக்கு வாய்ப்பு தரும்படி வலியுறுத்தினார். அவர்தான் பாட வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தியதால், பாட ஒப்புக்கொண்டார்' என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments