Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படக்குழுவை அம்போ என விட்டுச் சென்ற சுசீந்தரன் – கடுப்பான ஹீரோ!

படக்குழுவை அம்போ என விட்டுச் சென்ற சுசீந்தரன் – கடுப்பான ஹீரோ!
, புதன், 7 அக்டோபர் 2020 (19:25 IST)
இயக்குனர் சுசீந்தரன் ஜெய் நடிக்கும் படத்தை இயக்கி வந்த நிலையில் சிம்பு பட வாய்ப்புக்காக அதை பாதியிலேயே விட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்குப் பிறகு அவர் மிஷ்கின், சேரன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். இந்நிலையில் இப்போது இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது திண்டுக்கல்லில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக அவர் ஜெய் மற்றும் ஆதியை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி வந்த படத்தை பாதியிலேயே விட்டு விட்டு மீதிப் படத்தை தன் உதவியாளரை இயக்க சொல்லிவிட்டு வந்துள்ளாராம். இதனால் அந்த படத்தின் ஹீரோவான ஜெய் அதிருப்தியில் இருக்கிறாராம். ஏனென்றால் அந்த தயாரிபபாளரை சுசீந்திரனிடம் அறிமுகப்படுத்தி வைத்ததே ஜெய்தானாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8.3 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை விஷால் கொடுக்க வேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!